சென்னையில் வியாழக்கிழமை விட்டு விட்டு கனமழை பெய்யும்.. சொல்கிறது நார்வே வானிலை மையம்!
சென்னையில் வியாக்கிழமை விட்டு விட்டு கனமழை பெய்யும் என நார்வே நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: வியாக்கிழமை விட்டு விட்டு கனமழை பெய்யும் என நார்வே நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி ஒர மாதம் கடந்துவிட்டது. ஆனாலும் சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இதுவரை சொல்லும் அளவுக்கு மழை பெய்யவில்லை.
தொடக்கத்தில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை அதிரடி காட்டியது. இதேபோல் டெல்டா மாவட்டங்களில் ஒருவாரம் பரவலாக மழை பெய்தது. ஆனால் அதன் பிறகு பெரியளவில் மழை இல்லை.

முதல் முறையாக சந்திக்கிறது
ஆனால் இலங்கை அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலையால் கடந்த இரண்டு நாட்களாக தென் தமிழகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த வடகிழக்குப் பருவமழை காலத்தில் முதல் முறையாக தென் தமிழகம் தற்போது நல்ல மழையை சந்தித்து வருகிறது.

சென்னையில் நாளை முதல்
இந்நிலையில் சென்னையில் நாளை முதல் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக நார்வே நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதன் கிழமையான நாளை காலை முதல் சென்னையில் லேசானது முதல் மிதனமானது வரை மழை பெய்யும் என்றும் நார்வே வானிலை மைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விட்டு விட்டு கனமழை
இதைத்தொடர்ந்து வியாழக்கிழமை முழுவதும் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் நார்வே நாட்டு வானிலை மையம் கூறியுள்ளது. அவ்வப்போது விட்டு விட்டு கனமழை பெய்யும் என்றும் அந்த வானிலை மைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 நாட்கள் மேகமூட்டம்
வெள்ளிக்கிழமை சென்னையில் மழைக்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை முதல் டிசம்பர் 4ஆம் தேதியான திங்கள் கிழமை வரை மூன்று நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் நார்வே நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்தவாரம் கனமழை..
ஆனால் டிசம்பர் 5 செவ்வாய் கிழமையும் டிசம்பர் 6ஆம் தேதியான புதன்கிழமையும் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் நார்வே நாட்டு வானிலை மையம் கூறியுள்ளது. இதுவரை தமிழகத்தில் போதுமான அளவு வடகிழக்குப் பருவமழை பெய்யாத நிலையில் நார்வே நாட்டு வானிலை மைய கணிப்புகள் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு












Click it and Unblock the Notifications