வெள்ளத்தில் சிக்கி அழிந்த அறிவு களஞ்சியங்கள்.. உதவ நீங்கள் தயாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெள்ளத்தில் பாதிக்கப்பட்டது, இழக்கப்பட்டது விலை மதிப்பில்லாத உயிர்கள் மட்டுமல்ல, அதற்கு ஈடான புத்தகங்களும்தான். பல நூலகங்களில் இருந்த முக்கியமான புத்தகங்கள் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டுள்ளன. அவற்றை மீண்டும் சரி செய்ய நீங்கள் நினைத்தால் கூட முடியும்.

சென்னையின் அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகேயுள்ள புதுத்தெரு நூலகமும், இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒன்றாகும். சுமார் 15 ஆயிரம் புத்தகங்கள் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டுள்ளது. அந்த நூலகத்தின் தரைத்தள டைல்ஸ் முற்றிலுமாக மாற்றப்பட வேண்டியுள்ளது. கட்டிடம் புதுப்பிக்கப்பட வேண்டியுள்ளது. இதை சென்னை மாவட்ட நூலக அலுவலர் சந்திரமோகனும் உறுதி செய்கிறார். கொச்சி ஹவுஸ் நூலகத்தில் சுமார் 15 ஆயிரம் புத்தகங்கள் மாயமாகிவிட்டதாகவும் அவர் கூறுகிறார்.

Help the rain hitted public libraries in TN

கடலூர் மாவட்டத்தில் 15க்கும் மேற்பட்ட நூலகங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. நல்லத்தூர், சேத்தியாத்தோப்பு, கருங்குழி, மிரலூர், பரடூர், குனவாசல், ராசக்காபுரம், ஸ்ரீமுஸ்னம் மற்றும் கட்டுக்கூடல் ஆகிய நகரங்களிலுள்ள நூலகங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

நூலங்களுக்கு புத்தகங்களை வழங்கவோ, அதிலுள்ள கேலரிகளை சரி செய்யவோ விரும்புவோர் மணற்கேணி பதிப்பக எடிட்டர், ரவிக்குமாரை 9443033305 என்ற போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+