ரயில் நிலையத்தில் தண்ணீர் பாட்டிலுக்கு அதிக பணம் கேட்கிறார்களா? புகார் செய்ய தொலைபேசி எண்கள்
சென்னை: சென்னை புறநகர் ரயில்களில் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பில் அனுமதியின்றி பயணிப்போர் குறித்து, பெண்கள் சீட்டில் அமரும் ஆண்கள் குறித்து, காசு கேட்டு வீணாக தொல்லை தரும் திருநங்கைகள் குறித்து புகார் அளிக்க தெற்கு ரயில்வே உதவி எண்களை அறிவித்துள்ளது. இதன் மூலம், பிற பயணிகளுக்கு தொல்லை தருவோரை பிடித்து கொடுக்க பயணிகளுக்கு வசதி ஏற்பட்டுள்ளது.
அந்த உதவி எண்கள் இவைதான்: ரயில்வே பாதுகாப்புப் படை - 182, சென்னை பிரிவு - 044-25354457.

ரயில் நிலையங்களில் விற்கப்படும் 'ரயில் நீர்' குடிநீர் பாட்டில்களுக்கு ரூ.15 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைவிட அதிக விலைக்கு விற்கப்பட்டால் புகார் தெரிவிக்கலாம்.
அதற்கான எண்கள்:
சேலம் பிரிவு - 0427-2431010
0427, மதுரை பிரிவு - 0452-2308250
-0452-2308095, திருச்சி பிரிவு - 0431-2418992
0431-2464469, பாலக்காடு பிரிவு- 0491-2552755
0491-2555339, திருவனந்தபுரம் பிரிவு-
0471-2326484
0471-2326482, என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம். 138 என்ற ஹெல்ப்லைன் நம்பரிலும் புகார் தெரிவிக்கலாம்.












Click it and Unblock the Notifications