சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள்-உதவி செய்வோரை இணைக்கும் செல்போன் ஆப்!
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும், அவர்களுக்கு உணவு, மருந்து பொருட்கள் கொண்டு செல்லும், கள பணியாளர்களையும் இணைப்பது பெரும் சிரமமாக உள்ள நிலையில், இதற்காக ஒரு ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. Scappi for CHENNAI என்று டைப் செய்து கூகுள் பிளேயில் இந்த ஆப்பை டவுன்லோடு செய்யலாம்.

உதவி தேவைப்படுவோர் மற்றும், களப்பணியாளர்களை ஒருங்கிணைக்க, இந்த ஆப் பயன்படும், உதவி செய்வோர் எங்குள்ளனர், உதவி தேவைப்படுவோர் எங்குள்ளனர் என்பதை இந்த ஆப் கூறிவிடும். இதில் தகவல்களை அப்லோடு செய்தால், தேவைப்படுவோர் பார்க்கலாம்.
உதவி செய்ய மனமிருந்தும், முடியாமல் தவிப்போருக்கு இந்த ஆப் வரப்பிரசாதம். சென்னையில் தத்தளிப்போரும், காப்பாற்ற விரைந்தோரும், இந்த ஆப்பை டவுன்லோடு செய்யுங்கள்.
Geo location app for Chennai floods. Connecting donors and needy for food, shelter, medicine and supplies.
https://t.co/kj4lYNOU3V
— Shashi Tharoor (@ShashiTharoor) December 4, 2015 இந்த ஆப் குறித்த தகவலை, திருவனந்தபுரம் எம்.பி, சசிதரூர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications