உள்ளாட்சித் தேர்தல்.. எத்தனை பதவிகளுக்கு இன்று வாக்கு எண்ணிக்கை தெரியுமா?
Recommended Video
சென்னை: தமிழகத்தில் நடந்த ஊரக உள்ளாட்சிகளில் மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.
தமிழகத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் இரு கட்டங்களாக டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களைத் தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
156 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 37,830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4,700 கிராம ஊராட்சி மன்றத் தலைவர்கள் என மொத்தம் 45,336 இடங்களுக்கான முதல் கட்ட தேர்தல் கடந்த 27-ஆம் தேதி நடைபெற்றது. இதில் மொத்தம் 76.19 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
அது போல் 158 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 38,916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4,924 கிராம ஊராட்சி மன்றத் தலைவர்கள் என மொத்தம் 46,639 பதவிகளுக்கு இரண்டாம் கட்டமாக கடந்த 30-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 77 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
இட்லி இங்க இருக்கு.. சாம்பார், சட்டினி எங்கே?.. அறந்தாங்கியில் வாக்கு எண்ண ஊழியர்கள் மறுப்பு
- மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்- 515 இடங்கள், 2065 வேட்பாளர்கள்
- ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்- 5,090 இடங்கள், 22,776 வேட்பாளர்கள்
- கிராம ஊராட்சி மன்றத் தலைவர்கள்- 9624 இடங்கள், 35,611 வேட்பாளர்கள்
- கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்- 76,746 இடங்கள், 1,70,898 வேட்பாளர்கள்