அ ஆ இ ஈ உ ஊ ஐ... அசத்தல் இசை + பாட்டுடன் போதிக்கும் தமிழ் ஆசிரியர்..!
அரசு பள்ளியில் மாணவர்களுக்கு நன்கு பதியும் வகையில் தமிழ் ஆசிரியர் ஒருவர் உயிரெழுத்துகளை இசை மற்றும் பாட்டுடன் கற்றுக் கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
சென்னை: அரசு பள்ளியில் மாணவர்கள் மனதில் நன்கு பதியும் வகையில் தமிழ் உயிரெழுத்துகளையும் தமிழையும் ஆசிரியர் ஒருவர் இசை மற்றும் பாட்டுடன் கற்றுக் கொடுக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
நாம் சிறுவர்களாக இருக்கும் போது ஆங்கில மற்றும் தமிழ் எழுத்துகளை படித்த விதம் வேறு. நமது குழந்தைகள் படித்து வரும் விதம் வேறு. இப்போதுள்ள குழந்தைகள் ஆங்கில எழுத்துகளான 26 எழுத்துகளையும் பாடல் வடிவில்தான் படித்து வருகின்றனர். ஆனால் அ,ஆ, இ,ஈ மட்டும் சாதாரண முறையிலேயே கற்பிக்கப்படுகிறது. இவையெல்லாம் தனியார் பள்ளிகளில் நடைபெறுகிறது.
ஆனால் அரசு பள்ளிகளில் வழக்கம்போல்தான் A,B,C-யும், அ,ஆ, இ,ஈ-யும் கற்பிக்கப்படுவதாக நீங்கள் நினைத்தால் அது தவறு. ஒரு அரசு பள்ளியில் அ,ஆ, இ, ஈ-யை இப்படியும் கற்பிக்கலாமா என்று மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு இசை மூலம் கற்பிக்கப்படும் வீடியோ வைரலாகிறது. மாணவர்கள் நடனம் ஆடிக் கொண்டும் உயிரெழுத்துகளை பாட்டாக பாடியும் கற்று வருகின்றனர். நீங்களும் இந்த வீடியோவை பாருங்கள்.