பெண்கள், குழந்தைகள், நோயாளிகளுக்கு ஹெல்மெட் அணிய விதிவிலக்கா?... ஆக.19 ல் உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை : பெண்கள், நோயாளிகள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஹெல்மெட் அணிவதிலிருந்து விலக்கு அளிப்பது குறித்து ஆகஸ்ட் 19-ம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக உயர்நீமன்றம் அறிவித்துள்ளது.
ஜூலை 1-ந்தேதி முதல் மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்பவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து ஜூலை 1-ந்தேதி முதல் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களின் வாகனங்களின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் பின்னர் ஐ.எஸ்.ஐ. ஹெல்மட்டை வாங்கியதற்கான ரசீதை காண்பித்தால் தான் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறைவேற்ற காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் கட்டாய ஹெல்மெட் சட்டத்திலிருந்து பெண்கள், நோயாளிகள், குழந்தைகள் உள்ளிட்ட சிலருக்கு விலக்கு கோரி வழக்கறிஞர்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது கட்டாய தலைக்கவசம் சட்டம் நடைமுறைக்கு வந்தும் கடந்த 2 வாரங்களாக இச்சட்டத்தை அமல்படுத்துவதில் தமிழக அரசு மெத்தனம் காட்டுவதாக நீதிபதி கிருபாகரன் கூறினார்.
ஜூலை 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை தலைக்கவசம் அணியாத இருச்சக்கர வாகன ஓட்டிகள் மீது எவ்வளவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இச்சட்டத்திலிருந்து பெண்கள், நோயாளிகள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிலருக்கு விலக்கு அளிப்பது குறித்து ஆகஸ்ட் 19-ம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உள்ளதாகவும் நீதிபதி கூறினார்.
ஹெல்மெட்டுகளின் தரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications