மகாமக வழக்கில் பதிலளிக்காவிடில் தலைமை செயலாளர் நேரில் வர வேண்டும்- ஹைகோர்ட் அதிரடி!
சென்னை: கும்பகோணம் மகாமகம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பொறுமையாக கேட்கும் கேள்விகளுக்கு நகராட்சி நிர்வாகத்துறை முறையாக பதில் அளிக்காவிட்டால், தலைமைச் செயலாளரை நேரடியாக அழைத்து பதில்பெற வேண்டிய நிலை ஏற்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் மகாமகம் விழாவுக்காக கும்பகோணத்தில் உள்ள 44 குளங்களை தூர்வார எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதில் அளிக்கும்படி நகராட்சி நிர்வாகத்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர்அடங்கிய அமர்வு முன்பு வியாழன் அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக நகராட்சிநிர்வாகத்துறை செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், நீதிமன்ற கேள்விகளுக்கு முறையான பதில் இல்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், ஏற்கனவே தாங்கள் கேட்ட 4 கேள்விகள் குறித்து ஒரு மாதத்தில் உரிய நடவடிக்கை எடுத்து பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை முதண்மைச் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று வழக்கை ஜனவரி 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications