மனித சங்கிலி போன்ற அமைதி வழி போராட்டத்தை எப்படி தடுக்க முடியும்... ஹைகோர்ட் தலைமை நீதிபதி கேள்வி!
பொதுமக்கள் அமைதியான வழியில் போராடுவதை எப்படி தடுக்க முடியும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : திமுக மனித சங்கிலி போராட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கருத்து கூறிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமைதியான போராட்டத்தை எப்படி தடுக்க முடியும் என்று கேட்டுள்ளார்.
நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக நாளை தமிழகத்தில் திமுக சார்பில் மனிதசங்கிலி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனித சங்கிலி போராட்டம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்று அறிவித்து போராட்டத்திற்கு தடை விதிக்கவேண்டும் என்று சத்தியமூர்த்தி என்பவர் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு விசாரித்த போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் திமுகவின் மனித சங்கிலி போராட்டத்திற்கு ஜூலை 25ம் தேதியே அனுமதி மறுக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று மனுவை தலைமை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
மேலும் இந்த வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி முக்கியமான இரண்டு கேள்விகளை எழுப்பியுள்ளார். போராட்டத்தில் ஈடுபடுவது அனைவருக்குமான உரிமை. பொதுமக்களின் அன்றாடப் பணிகளைத் தொடர முடியாமல் இடையூறு ஏற்படுத்தினால் மட்டுமே காவல்துறை தலையிட முடியும்.
கருப்பு பட்டை அணிந்து சாலையோரத்தில் மனித சங்கிலி நடத்தும் போராட்டத்தில் எப்படி நீதிமன்றம் தலையிட்டு தடை விதிக்க முடியும் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். நீதிமன்றம் போராட்டத்திற்கு தடை விதிக்க மறுத்தாலும், காவல்துறை அனுமதியில்லாததால் திமுகவின் மனித சங்கிலி போராட்டம் அறிவித்தபடி நாளை நடக்குமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
-
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
திமுக போட்டியிடும் தொகுதிகள் எவ்வளவு.. கூட்டணி கட்சிகளுக்காக ஸ்டாலின் எடுக்கும் ரிஸ்க் -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
Duraimurugan: தவாக வேல்முருகன் விலகியது குறித்த கேள்விக்கு! துரைமுருகனின் face expression-ஐ பாருங்க -
திமுகவால் எப்படி சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? ஊழலை தோலுரித்து காட்டுவேன்! வேல்முருகன் -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
"6 தொகுதிகளிலும் ஜெயித்திருப்போம்!" 2021 தேர்தல் குறித்து சிபிஎம் பெ.சண்முகம் அதிரடி விளக்கம்!












Click it and Unblock the Notifications