Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய யூனுஸின் பெயரை குழந்தைக்கு வைத்த சித்ரா

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்த சித்ரா என்ற கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்துள்ளது. அவர் தன்னை காப்பாற்றிய வாலிபர் யூனுஸின் பெயரை தனது குழந்தைக்கு வைத்துள்ளார்.

சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை சக மக்கள் காப்பாற்றி உணவு, உடை அளித்து வருகிறார்கள். இந்நிலையில் சென்னையில் உள்ள கிரசென்ட் பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவரான யூனுஸ் ஊரப்பாக்கத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டுள்ளார்.

Hindu couple name their baby Younus: Know why?

அந்த சமயத்தில் வெள்ளத்தில் தத்தளித்த மோகன் மற்றும் அவருடைய நிறைமாத கர்ப்பிணி மனைவியான சித்ராவை யூனுஸ் பார்த்து காப்பாற்றியுள்ளார். அவர்களை வெள்ளத்தில் இருந்து மீட்டு பாதுகாப்பான இடத்தில் சேர்த்துள்ளார்.

அப்போது சித்ராவுக்கு பிரசவ வலி எடுத்து அழகிய குழந்தை பிறந்துள்ளது. நீரில் தத்தளித்த தங்களை காப்பாற்றிய யூனுஸுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மோகன்-சித்ரா தம்பதி தங்கள் குழந்தைக்கு யூனுஸ் என்று பெயர் வைத்துள்ளனர்.

இக்கட்டான நேரங்களில் யாருக்கும் மதம் தெரிவது இல்லை மனித நேயம் தான் தெரிகிறது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு. முன்னதாக அண்மையில் மும்பையில்

நிறை மாத கர்ப்பிணி பெண்ணை டாக்சி டிரைவர் ஒருவர் நடுவழியில் இறக்கிவிட்டு சென்றுவிட்டார். அந்த முஸ்லிம் பெண்ணுக்கு, விநாயகர் கோயிலுக்குள் (பொதுவாக தீட்டுபட கூடாது என்பது கோயில் ஆகம விதி) வைத்து பேறுகாலம் பார்த்தனர். தனது ஆண் குழந்தைக்கு அந்த பெண் கணேஷ் என்று பெயர் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+