தடையை மீறி ஆம்பூருக்கு செல்ல முயன்ற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது
விழுப்புரம்: தடையை மீறி ஆம்பூருக்கு செல்ல முயன்ற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை திருக்கோவிலூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த ஷமில் அகமது(26) என்பவரை பள்ளிக்கொண்டா போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்ட அவர் திடீர் என உயிர் இழந்தார். இதை கண்டித்து ஆம்பூரில் முஸ்லீம்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

வாகனங்களுக்கு, டாஸ்மாக் கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. கலவரத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்த வேலூர் எஸ்.பி.செந்தில்குமாரி உள்பட 10க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் 2 ஐ.ஜி., 7 டி.எஸ்.பி., 12 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் ஆம்பூரில் குவிக்கப்பட்டுள்ளனர். கலவரம் வெடித்ததை அடுத்து முக்கிய தலைவர்கள் ஆம்பூர் செல்ல போலீசார் தடை விதித்தனர்.
இந்த சூழலில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் விழுப்புரத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் அவர் அங்கிருந்து ஆம்பூர் செல்ல முயன்றார் என்று கூறப்படுகிறது. தடையை மீறி ஆம்பூர் செல்ல முயன்ற சம்பத்தை திருக்கோவிலூரில் போலீசார் கைது செய்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications