மன்மதன் கோயிலை இடித்த நகராட்சி.. இந்து முன்னணி போராட்டம்!
தஞ்சாவூர்: மன்மதன் கோயிலை இடித்த நகராட்சி ஊழியர்களுக்கும், இந்து முன்னணியினருக்கும் பெரும் தகராறு வெடித்தது.
திருவாரூர் முதலியார் தெருவை சேர்ந்தவர் டாக்டர் வெங்கடேஷ். இவருடைய வீட்டின் அருகே மன்மதனுக்காக கோவில் இருந்தது. இந்த கோவில் தனக்கு இடையூறாக இருப்பதால் அதை அகற்ற வேண்டும் என்று கோவில் நிர்வாகிகளிடம் வெங்கடேஷ் கூறிவந்துள்ளார். கோயிலை அகற்றுவது நல்லதல்ல என்று அக்கோயில் நிர்வாகிகள் கூறிவந்துள்ளனர்.

இதனால் வெங்கடேஷ், கோவிலை அகற்ற வலியுறுத்தி சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஹைகோர்ட் கோவிலை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து நேற்றுமுன்தினம் அதிகாலை முதலியார் தெருவில் இருந்த மன்மதன் கோவிலை திருவாரூர் நகராட்சி ஊழியர்கள் இடித்து அகற்றினர். அப்போது கோவிலில் இருந்த சாமி சிலைகளையும் எடுத்து சென்றனர்.
கோவில் இடிக்கப்பட்டதை கண்டித்து இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்களும், முதலியார் தெரு பகுதியை சேர்ந்த பொதுமக்களும் திருவாரூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையின் போது சென்னை ஹைகோர்ட்டு உத்தரவின்படி கோவில் அகற்றப்பட்டு இருப்பதாகவும், இதுகுறித்த எதிர்ப்பை கோர்ட்டில் தெரிவிக்கும்படியும் போலீசார் அறிவுறுத்தினர்.
இதைதொடர்ந்து இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் கோவில் கட்டுவதற்காக அப்பகுதி மக்கள், இந்து முன்னணி அமைப்பினருடன் இணைந்து இரும்பு தகடுகளை கொண்டு கூடாரம் அமைத்தனர். இந்த கூடாரத்தை உடனே அப்புறப்படுத்திய போலீசார், இதுதொடர்பாக 35 பேரை கைது செய்து பின்னர் விடுவித்தனர். சென்னை ஹைகோர்ட்டு உத்தரவின்படி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்ததாகவும், அரசு ஊழியர்களின் பணிக்கு இடையூறு ஏற்படுத்திய தாகவும் திருவாரூர் நகரசபை ஆணையர் தர்மலிங்கம் திருவாரூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் பேரில் இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட துணை தலைவர் காளமேகம், பா.ஜ.க ஒன்றிய பொதுச் செயலாளர் செந்தில் அரசன், நகர செயலாளர் பிரமோத், நிர்வாகிகள் கணேசன், தேவகுமார் உள்பட 35 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications