For Daily Alerts
Just In
ஆங்கில புத்தாண்டுக்காக நள்ளிரவில் கோயில் நடையை திறப்பதா? திருச்செந்தூரில் இந்து முன்னணி போராட்டம்
தூத்துக்குடி: திருச்செந்தூர் கோவிலில் ஆங்கில வருடப் பிறப்பன்று நள்ளிரவில் நடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்க் கடவுளான முருகன் குடிகொண்டுள்ள 2வது படை வீடு திருச்செந்தூர். இங்கு சுப்பிரமணிய சுவாமி என்ற பெயரில் முருகன் குடிகொண்டுள்ளார்.
ஆங்கில வருடப்பிறப்பை முன்னிட்டு நேற்று நள்ளிரவு நடைதிறக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்திருந்தது. கிறிஸ்தவ முறைப்படி துவங்கும் புத்தாண்டுக்கு, இந்து கடவுள் கோயிலை, வழக்கத்துக்கு மாறாக நள்ளிரவில் திறப்பதற்கு இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்தது.
எனவே, புதன்கிழமையன்று நள்ளிரவு திருச்செந்தூர் கோவில் முன்பு இந்து முன்னணி தெற்கு மாவட்ட தலைவர் வி.எஸ்.முருகேசன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
Comments
English summary
Hindu Munnani cadres oppse to Tiruchendur Subramaniya Swamy temple to remain open at mid night on new year eve.
Story first published: Thursday, January 1, 2015, 16:49 [IST]