ஜல்லிக்கட்டுக்காக... சென்னையில் சாணிக் குளியல் போட்ட இந்து மக்கள் கட்சியினர்!
ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தக்கோரி சென்னையில் இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அவர்கள் சாணிக் குளியல் போட்டு மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
சென்னை: ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சாணிக்குளியல் போட்டு அவர்கள் போராட்டம் நடத்தினர்.
ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் எழுச்சிப் போராட்டங்கள் சூடுபிடித்துள்ளன. நாளை மறுநாள் பொங்கல் கொண்டாடப்படவுள்ள நிலையில் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க மறுத்துள்ளது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுப்போட்டிகளை எந்த தடையும் இன்றி நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னையில் இந்து மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுவரை ஜல்லிக்கட்டு விவகராத்தில் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து அவர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரிபவனை முற்றுகையிட்டனர்.
அப்போது இந்துமக்கள் கட்சி நிர்வாகி ராம ரவிகுமார் தலைமையில் அவர்கள் சாணிக் குளியல் போட்டு மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்து மக்கள் கட்சியினரின் இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
75 லட்சம் பேர் மகிழ்ச்சி.. பிரதமர் ஸ்வநிதி திட்டத்தில் 50000 ரூபாய்.. யாருக்கு எல்லாம் கிடைக்கும் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
மத்திய அரசின் முடிவால் திருப்பூருக்கு ஜாக்பாட் .. பின்னலாடை அதிபர்கள் குஷி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications