நெருங்கும் கோர்ட் உத்தரவு: நெல்லையில் 20 ஆயிரம் டாஸ்மாக் ஊழியர்கள் திக்..திக்
நெல்லையில் நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட கோர்ட் உத்தரவிட்ட கெடு வரும் 31ம் தேதியுடன் முடிவடைதால் ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர்.
நெல்லை: நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட கோர்ட் உத்தரவிட்ட கெடு வரும் 31ம் தேதியுடன் முடிகிறது. இதனால் பல ஆயிரம் டாஸ்மாக் ஊழியர்கள் பயத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் 2003ம் ஆண்டில் 6300 மதுக்கடைகளை டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் அப்போதைய அதிமுக அரசு திறந்தது. டாஸ்மாக் கடைகளால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் பல ஆயிரம் குடும்பங்கள் அடிப்படை ஆதாரத்தை இழந்து வருகின்றன.

நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளால் விபத்துகள் அதிகரிப்பதாக கூறி
நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மார்ச் 31ம் தேதிக்குள் நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டார்.
இதையடுத்து கடந்க பிப்ரவரி மாதம் மாநிலம் முழுவதும் உள்ள கோயில், பள்ளி, கல்லூரி அருகில் உள்ள சுமார் 2800 கடைகளை மூடிவிட்டு வேறு இடத்திற்கு மாற்ற கடை ஊழியர்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. ஹைகோர்ட் விதித்த கெடு முடிய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் தமிழக அரசு எதையும் கண்டு கொள்ளாமல் மவுனமாக இருந்து வருகிறது.
மார்ச் 31ம் தேதிக்குள் கோர்ட் உத்தரவுப்படி 2800 கடைகளை மூடாவிட்டால் சென்னை ஐகோர்ட்டின் பிடி இறுகும் என தெரிகிறது. இந்த கடைகள் மூடப்படும் பட்சத்தில் சுமார் 2800 கடைகளில் பணியாற்றி வரும் 20 ஆயிரம் ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் தங்களின் நிலை என்ன என்று தெரியாமல் கலக்கத்தில் உள்ளனர்.
-
டாஸ்மாக்: பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா! பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மைகள்! விஜய் காதுக்கு வந்த செய்தி -
TASMAC: பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் ஏன்? யார் யாருக்கு லஞ்சம் போகிறது தெரியுமா? முழு லிஸ்டடால் ஷாக் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications