For Daily Alerts
Just In
நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு!
கனமழையால் நெல்லை கன்னியாகுமரி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை: கனமழையால் நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி அருகே மையம்கொண்டிருக்கும் ஓகி புயலால் கன்னியாகுமரி நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. பலத்த காற்று மற்றும் கனமழையால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கொட்டித்தீர்க்கும் கனமழையால் கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. நாளையும் கனமழை நீடிக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் கனமழையால் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அறிவிப்பை அந்ததந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர்.
Comments
cyclone ockhi heavy rain nellai kanyakumari holiday schools college நெல்லை கனமழை கன்னியாகுமரி பள்ளி கல்லூரிகள்
English summary
Holiday for Schools and colleges tomorrow in Nellai and Kanniyakumari districts. Due to Ockhi cyclone Nellai and Kanniyakumari districts gets heavy rains.
Story first published: Thursday, November 30, 2017, 20:03 [IST]