கருணாநிதியை பார்க்க தள்ளுமுள்ளு... கதவு கண்ணாடி உடைந்ததால் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: மதுரையில் தங்கியிருந்த ஓட்டலுக்குள் இருந்து திமுக தலைவர் கருணாநிதி வெளியே வரும்போது அங்கிருந்த கதவின் கண்ணாடிகள் விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மதுரையில் பிரசாரம் மேற்கொண்டார். இதற்காக அவர் தனியார் ஓட்டலில் தங்கியிருந்தார். இன்று காலை சென்னை செல்வதற்காக ஓட்டலில் இருந்து கிளம்பினார். இதனையறிந்த தொண்டர்கள் அவரைப் பார்க்க குவிந்தனர். இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

கருணாநிதி காரில் ஏற இருந்த சமயத்தில் ஓட்டல் முன்பக்க கண்ணாடி கதவு உடைந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கருணாநிதி உடனடியாக காரில் ஏறி சென்னை கிளம்பினார்.
கருணாநிதி சென்னைக்கு கிளம்பும் நேரத்தில் ஹோட்டல் ரிசப்சனில் இருந்த கதவின் கண்ணாடிகள் விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.












Click it and Unblock the Notifications