ஜல்லிக்கட்டு எதிரொலி.." கோக்" நறுமண பால் விளம்பர பலகையை அகற்றியது ஓட்டல் சரவணபவன் !
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரியும், பீட்டா அமைப்புக்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் வரலாறு காணாத போராட்டங்கள் நடைபெற்றன. மாணவர்கள், இளைஞர்கள் என லட்சக்கணர்கானோர் தன்னெழுச்சியாக ஒன்றுகூடி அறவழியில் போராட்டம் நடத்தினர்.
ஜல்லிக்கட்டு தடைக்குப் பின்னால் மிகப் பெரிய சதி இருப்பதாகவும், பன்னாட்டுக் கம்பெனிகள் மூலம் இந்த சதி ஜல்லிக்கட்டு மூலம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர். ஜல்லிக்கட்டு காளைகளை ஒழிப்பதன் மூலம் நாட்டு மாடுகளை முற்றிலும் இல்லாமல் செய்ய பன்னாட்டு நிறுவனங்கள் முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

இந்த சதிக்கு பதிலடி கொடுக்கம் வகையில் அமெரிக்க நாட்டுத் தயாரிப்புகள் அனைத்தையும புறக்கணிப்போம். குறிப்பாக பெப்சி, கோக் பானங்களை முற்றிலும் ஒழிப்போம் என்ற குரல் ஒழிக்கத் தொடங்கியுள்ளது.
இதனிடையே கோக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள Vio என்ற நறுமண பால் சென்னையில் விற்பனைக்கு வந்துள்ளது. அதற்கான விளம்பர பலகை சரவணபவன் ஓட்டலில் வைக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்புகள் கிளம்ப அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
அதில், VIO பால் நாங்கள் விற்பனை செய்யவில்லை. இது கோகோலா நிறுவனத்தின் சுவையூட்டப்பட்ட பால். இந்தப் பால் காபி மற்றும் டீ எதற்கும் உபயோகப்படுத்த முடியாது. இதை நாங்கள் உபயோக்கிவில்லை. நாங்கள் மாடுகள் தனியாக வளர்க்கிறோம். அது தவிர நாட்டு மாடு பால் பல இடங்களில் கலெக்சன் சென்டர் வைத்து வாங்கி, இயற்கையாக அதை மட்டுமே உபயோகப்படுத்துகிறோம்.
பாக்கெட் பால் கூட நாங்கள் உபயோகிப்பதில்லை. விளம்பரத்திற்காக மட்டுமே அந்தப் பெயர் பலகைகள் அந்த நிறுவனத்தால் வைக்கப்பட்டிருக்கிறது. உங்களின் வேண்டுகோளுக்காக அந்தப் பலகை எடுக்கப்பட்டு விட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications