அதோ வர்றாங்க பாரு அம்மா… வானத்தை பார்த்தபடி கடும் வெயிலில் திண்டாடும் அதிமுகவினர்!
சென்னை: என்னா கலரு... இன்னமும் அப்படியேதான் இருக்காங்க இல்ல... இது பிரச்சாரத்திற்குப் போகும் முதல்வர் ஜெயலலிதாவைப் பார்த்து மக்களும், தொண்டர்களும் கூறும் வார்த்தை....
சினிமாவில் நடித்த காலம் தொடங்கி மூன்று முதல்வராக ஆக்கியது வரை ஜெயலலிதாவின் இந்த முக கவர்ச்சியும் கம்பீரமும்தான் தொண்டர்களை கவர்ந்த அம்சம்.
கட்சி விசுவாசிகள் மட்டுமின்றி திருவாளர் பொது ஜனங்கள் கூட சில சமயம் ஜெயலலிதா நிறத்தைப் பற்றி பேசாமல் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக பிரச்சாரத்திற்கு வரும் ஜெயலலிதாவைக் காண தனி கூட்டமே கூடுகிறது.

பங்குனி வெயிலில்…
அக்னி நட்சத்திரம் போல பங்குனி மாத வெயிலில் பல்லைக் கடித்துக் கொண்டு மக்கள் காத்திருப்பது ஜெயலலிதாவை நேரில் பார்க்கத்தான்.

முடியாத கார் பயணம்
முன்பெல்லாம் சேலம், திருச்சியில் போய் தங்கிவிட்டு அங்கிருந்து காரிலோ, ஹெலிகாப்டரிலோ பிரசாரப் பயணம் போய் வந்தார் ஜெயலலிதா. இந்த முறை சென்னையில் இருந்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஹெலிகாப்டரில் பறக்கிறார். மிக அதிக நேரம் காரில் அவரால் உட்கார முடியவில்லை என்பதால்தான் இந்த மாற்றம் என்கிறார்கள்.

ஹெலிகாப்டர் தரிசனம்
ஜெயலலிதா பிரச்சாரத்திற்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்குவதை எதிர்கட்சிகள் வேண்டுமானால் குற்றம் சொல்லலாம். அதிமுக தொண்டர்கள் அதை ஒரு அதிசய நிகழ்வாகத்தான் பார்க்கின்றனர்.

அதோ வர்றாங்க பாரு…
வழக்கமாக 3 மணிக்கு மேல் தான் வெயில் இறங்கும் போது பேச வருகிறார் ஜெயலலிதா என்றாலும் காலை 9 மணியில் இருந்தே வெளியில் காத்திருக்கின்றனர் தொண்டர்கள். என்னதான் வெயில் கொதித்தாலும் அங்கு ஆனால், ஜெயலலிதாவை நேரில் பார்த்த பரவசத்தில் அத்தனை கஷ்டங்களையும் மறந்து விடுகிறார்கள் தொண்டர்கள்.












Click it and Unblock the Notifications