சாதுவான 'சயான்' எப்படி கொடநாடு கொலை குற்றவாளியானார்? பேக்கரி நண்பர்கள் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

கொடநாடு கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட சயான் மிகவும் சாதுவானவர்,அவரா இவ்வளவு பெரிய விவகாரத்தில் சிக்கியுள்ளார் என்று அதிர்ச்சி தெரிவிக்கின்றனர் சயானின் நண்பர்கள்.

கோவை:கொடநாடு எஸ்டேட்டில் கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் அடுத்தடுத்து போலீசாரிடம் சிக்கி வருகிறார்கள்.இந்த நிலையில் கேரளாவைச் சயான் போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் பாலக்காடு அருகே சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.அவருடன் சென்ற மனைவி மற்றும் குழந்தை விபத்தில் உயிரிழந்தனர்.

 How the 'Sayan' become a criminal, his friends in shock

படுகாயத்துடன் கோவை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் சயானை பார்க்க அவரின் பேக்கரி நண்பர்கள் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.சயான் சிகிச்சைபெறும் வார்டு முன்பு கண்காணிப்புப் பணியில் உள்ள போலீசார்,அவர்களை உள்ளே விட மறுத்து திருப்பி அனுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக பேக்கரி நண்பர்கள் ஊழியர்கள் இருவர் செய்தியாளர்களிடம் பேசினார்.அவர்கள் கூறுகையில், இவ்வளவு பெரிய வழக்கில், சயான் சிக்கியுள்ளது அதிர்ச்சி தருகிறது. மிக சாதுவாக அமைதியாக காணப்படும் இவர் கொலைகார கும்பலுடன் எப்படி கூட்டு சேர்ந்தார் என்றே தெரியவில்லை.

இவர் இந்த காரியத்தை செய்திருப்பாரா என்பது சந்தேகம் தான். வேறு யாராவது இவரை தவறான வழிக்கு அழைத்து சென்றிருக்கலாம் என்றே நாங்கள் நினைக்கிறோம்." என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+