அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் தனக்கும் தொடர்பில்லை- சுப்ரமணியம் கடிதம் சிக்கியது
அமைச்சர் விஜயபாஸ்கர் நண்பர் சுப்ரமணியம் தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதம் சிக்கியுள்ளது.
நாமக்கல்: தனக்கும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தற்கொலைக்கு முன்பாக சுப்ரமணியம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாமக்கல்லை சேர்ந்த கான்ட்ராக்டர் சுப்ரமணியன், அமைச்சர் விஜயபாஸ்கர், உள்பட பல அரசியல்வாதிகளுக்கு மிக நெருக்கமான நண்பராக இருந்துள்ளார். ஏப்ரல் 7ஆம் தேதி சுப்ரமணியம் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகி வந்தார் சுப்ரமணியன். இந்த நிலையில் கடந்த 8ம்தேதி செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள அவரது தோட்டத்து வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தற்கொலை சம்பவம் குறித்து அவரது மகன் சபரீஷ் மோகனூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். சுப்பிரமணியன் வருமானவரித்துறை விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை எனில் வருமானவரித்துறை சோதனைக்கு பிறகு யாராவது அவரை மிரட்டினார்களா? என்ற கோணத்தில் மனைவி, மகனிடம் விசாரித்தார் இளங்கோ.

விசாரணை அதிகாரி
இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட ஏடிஎஸ்பி செந்தில், இந்த வழக்கை விசாரிக்க மாவட்ட எஸ்.பி மகேஷ்வரன் நேற்றிரவு உத்தரவிட்டு உள்ளார்.
இதனையடுத்து மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவிடம் இருந்து இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் செந்திலிடம் ஒப்படைக்கப்பட்டது. ஏடிஎஸ்பி செந்தில் தலைமையிலான போலீசார் இன்று முதல் விசாரணையை தொடங்குவார்கள் என கூறப்பட்டது.

விசாரணை தொடங்கியது
இந்த நிலையில் உடனடியாக தனது விசாரணையை தொடங்கியுள்ளார் செந்தில், செவிட்டுரங்கன்பட்டியில் சுப்ரமணியம் தற்கொலை செய்து கொண்ட பண்ணை வீட்டில் பணியாளர்களிடம் விசாரணையை தொடங்கிய செந்தில், பணியாளர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளார்.

மனைவியிடம் விசாரணை
அவரது மனைவி, மகன், மருமகன் ஆகியோரிடம் நாமக்கல் மதுவிலக்கு ஏடிஎஸ்பி விசாரணை மேற்கொண்டார். அப்போது அவருக்கு வேறு ஏதேனும் பிரச்சினை இருந்ததா? என்றும் விசாரித்துள்ளார்.

தற்கொலை கடிதம்
சுப்ரமணியம் தற்கொலை செய்யும் முன்பு எழுதிய கடிதத்தை தனது உறவினர்களுக்கு அனுப்பியதாக கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று மதியம் தபாலில் ஒரு பார்சல் சுப்ரமணியம் வீட்டுக்கு வந்துள்ளது. இந்த கடிதத்தை இப்போது உறவினர்கள் வெளியிட்டுள்ளனர். அந்த கடிதத்தில் தனக்கும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

சிக்கியது எப்படி?
பல பக்கங்கள் எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில் வருமான வரித்துறையினர் கேட்ட கேள்விகள், அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் பற்றியும் குறிப்பிட்டுள்ளாராம். சுப்ரமணியம் தற்கொலை பற்றி விசாரணை நடைபெற்று வரும் நிலையில் திடீரென தற்கொலை கடிதம் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிக்கியது எப்படி?
பல பக்கங்கள் எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில் வருமான வரித்துறையினர் கேட்ட கேள்விகள், அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் பற்றியும் குறிப்பிட்டுள்ளாராம். தனது தொழிலுக்கு பிஎஸ்கே தென்னரசு என்பவர் தொடர்ந்து தொல்லை அளித்து வந்ததாகவும், தன்னை பற்றி பல அவதூறுகளை அவர் பரப்பி வருவதாகவும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளாராம். குறிப்பாக தனக்கும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

13 பேருக்கு கடிதம்
தனது மனைவி மற்றும் சில உயர் அதிகாரிகள் உட்பட 13 பேருக்கு தனித்தனியே இது போன்ற கடிதங்களை சுப்ரமணி தபால் மூலமாக அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அதனை கைப்பற்றும் முயற்சியில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர். சுப்ரமணியம் தற்கொலை பற்றி விசாரணை நடைபெற்று வரும் நிலையில் திடீரென தற்கொலை கடிதம் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications