அதிமுகவில் மட்டும் நான் இருந்திருந்தால்.. காங். தலைவர் திருநாவுக்கரசர் சொல்வதை பாருங்கள்
நான் அதிமுகவில் இருந்திருந்தால் முதல்வராகி இருப்பேன். அப்படி இல்லை என்றாலும் கூட ஓ.பன்னீர்செல்வம் இருந்த இடத்தில் நான் இருந்திருப்பேன். இதற்காக நான் இப்போது வருத்தப்படவில்லை என திருநாவுக்கரசர் தெரிவித
சென்னை: அதிமுகவில் இருந்திருந்தால் நான் முதல்வராகியிருப்பேன் என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது:
எம்ஜிஆர் காலத்தில் இருந்தே நான் அரசியலில் இருந்து வருகிறேன். அதன் பிறகு ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருந்து அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தேன்.
பின்னர் கட்சியிலிருந்து நான் நீக்கப்பட்டேன். நான் அதிமுகவில் இருந்திருந்தால் முதல்வராகி இருப்பேன். அப்படி இல்லை என்றாலும் கூட ஓ.பன்னீர்செல்வம் இருந்த இடத்தில் நான் இருந்திருப்பேன். இதற்காக நான் இப்போது வருத்தப்படவில்லை.
அதேநேரம், இப்போது 150 வருட பாரம்பரிய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக உள்ளேன். கக்கன், காமராஜர் இருந்த இடத்தில் நான் இருப்பதை பெருமையாக கருதுகிறேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
பிரதமர் மோடி ரூ.500 மற்றும் ரூ.1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது தவறு என்பது தான் காங்கிரஸ் கட்சியின் கருத்து ஆகும். சரியான திட்டமிடல் இல்லாமல் மோடி அறிவித்து விட்டார். இவ்வாறு தெரிவித்தார்.