அழகிரியை நாடகம் பார்க்கத் தான் கூப்பிட்டேன்... அரசியல் பேசவில்லை : எஸ்.வி.சேகர்
சென்னை: திமுகவில் இருந்து நீக்கப்பட்ட அழகிரியை சந்தித்த போது, அரசியல் குறித்துப் பேசவில்லை எனத் தெரிவித்துள்ளார் பாஜக கொள்கை பரப்பு செயலாளரும், நடிகருமான எஸ்.வி.சேகர்.
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளருமான இல.கணேசன் நேற்று சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவருடன் பாஜக கொள்கை பரப்புச் செயலாளரும், நடிகருமான எஸ்.வி.சேகர், மாநில செயலாளர் கே.டி.ராகவன், அலுவலக செயலாளர் சர்வோத்தமன், இந்திய ஜனநாயக கட்சியின் தென்சென்னை பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ஆரூர் சுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்.

அப்போது, மு.க.அழகிரியை சந்தித்தது ஏன்? என எஸ்.வி.சேகரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதிலாவது:-
சிவகாசியில் எனது நாடகம் ஒன்று நடைபெற்றது. அதை காண வருமாறு மு.க.அழகிரியை சந்தித்து அழைப்பு விடுத்தேன். மற்றபடி அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை. பொதுவாக, தி.மு.க.வை சேர்ந்தவர்களை மற்ற கட்சியினர் சந்தித்தால், அவர்களை கட்சியில் (தி.மு.க.) இருந்து நீக்கிவிடுவார்கள். ஆனால், இது (பா.ஜ.க.) தேசிய கட்சி. அப்படி எதுவும் செய்யமாட்டார்கள்'' எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications