24 வருட அரசுப் பணி.. 23 முறை டிரான்ஸ்பர்.. ஊழலுக்கு எதிராக பாடுபடுவதால்: சகாயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 24 வருடமாக அரசுப் பணியில் இருந்து வருகிறேன். இதுவரை 23 முறை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளேன். ஆனால் தொடர்ந்து ஊழலுக்கு எதிராக போராடி வருகிறேன் என்று கூறியுள்ளார் சகாயம் ஐ.ஏ.எஸ்.

ஜெயலலிதா கைதுக்கு சில நாட்களுக்கு முன்புதான் சகாயம் பரபரப்பில் தமிழகமே மூழ்கிக் கிடந்தது. சுரங்க ஊழல் தொடர்பான விசாரணையை சகாயம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அடுத்த சில நாட்களில் ஜெயலலிதா சிறைக்குப் போய் விட்டார். இந்த நிலையில் சென்னை வியாசர்பாடியில் நேற்று நடந்த மது ஒழிப்புப் பேரணியில் கலந்து கொண்டு சகாயம் பேசினார்.

சிறு வயதிலேயே

சிறு வயதிலேயே

நிகழ்ச்சியில் சகாயம் பேசுகையில், சிறு வயதிலேயே காந்தியின் அகிம்சை கொள்கையை மாணவ, மாணவியர்களுக்கு புகட்ட வேண்டும்.

வளர்ந்ததும் கடைப்பிடிப்பார்கள்

வளர்ந்ததும் கடைப்பிடிப்பார்கள்

அப்போதுதான் அவர்கள், வளர்ந்து பெரியவர்களாக வரும்போது அந்த கொள்கையை கடைபிடிப்பார்கள்.

23 முறை டிரான்ஸ்பர்

23 முறை டிரான்ஸ்பர்

நான் 24 ஆண்டுகளாக அரசுப் பணியில் இருந்து வருகிறேன். பணியின்போது 23 முறை இடமாற்றம் செய்யப்பட்டேன்.

ஊழலை ஒழிக்க பாடுபடுவேன்

ஊழலை ஒழிக்க பாடுபடுவேன்

ஊழலை ஒழிக்க இதுநாள் வரை பாடுபட்டு வருகிறேன். தொடர்ந்து பாடுபடுவேன்.

மது குடிக்காதீர்கள்

மது குடிக்காதீர்கள்

மது குடிப்பதின் மூலம் இளைஞர்கள் கெட்டுப்போவதை தடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் இளைஞர்கள் புதிய சமூகம், புதிய தேசம் என்ற உறுதிமொழியை ஏற்று செயல்பட வேண்டும் என்றார் சகாயம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+