மக்களுக்கு நல்லது செய்யவே போட்டி... என் குரலை நான் சத்தமாக பதிவு செய்வேன் - விஷால்

நான் அரசியல்வாதியாக இன்னும் மாறவில்லை.சினிமாவில் நடப்பது போல ஆர்.கே. நகரில் நடந்துள்ளது என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மக்களுக்கு நல்லது செய்யவே போட்டி... என் குரலை நான் சத்தமாக பதிவு செய்வேன் - விஷால்- வீடியோ

    சென்னை: மக்களுக்கு நல்லது செய்யவே அரசியலுக்கு வர நினைத்தேன். இன்னும் நான் அரசியல்வாதியாக மாறவில்லை. சினிமாவில் நடந்தது போல ஆர்.கே. நகரில் நடந்துள்ளது என்ற கூறியுள்ளார் விஷால்.

    புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னிபரிட்சை நிகழ்ச்சியில் பேசிய விஷால்,
    என் வேட்புமனுவை தள்ளுபடி செய்தது நிறைய பேருக்கு சந்தோசம். என் மீது எந்த எப்ஐஆரும் இல்லை. ஆனால் திமுக, அதிமுக வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    72வது வேட்புமனுவாக பரிசீலிக்க வேண்டும். ஆனால் 145வது வேட்புமனுவாக என் மனுவை பரிசீலனை செய்தனர். எல்லோருடைய மனுவையும் தேர்தல் அதிகாரியே முடிவு செய்தார். ஆனால் எனக்கு மட்டும் ஏன் வெளியில் போய் பேசினார் என்று தெரியவில்லை.
    என்னுடைய புகாரை மனசாட்சிப்படி ஏற்றுக்கொண்டு கையெழுத்து போட்டிருக்கிறார்.
    தேர்தல் அதிகாரிகாரியின் அறிவிப்பு வீடியோவில் பதிவாகியுள்ளது. நான் பேட்டி கொடுத்த பின்னர் யாருமே அப்ஜெக்ட் செய்யவில்லை. வீட்டிற்கு போய் விட்டு வருவதற்குள் வேட்புமனுவை தள்ளுபடி செய்து விட்டனர்.

    பிரதமர், ஜனாதிபதிக்கு புகார்

    பிரதமர், ஜனாதிபதிக்கு புகார்

    72 பேரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. என்னைப்பார்த்து ஏன பயப்படுகிறார்கள்.
    தேர்தல் அதிகாரி, தேர்தல் ஆணையர், ஜனாதிபதி, பிரதமருக்கு புகார் அனுப்பியுள்ளேன்.
    மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று தேர்தல் களத்தில் இறங்கினேன். என் மனுவை மட்டும் தள்ளுபடி செய்தது ஏன்?

    நான் யாருக்கும் எதிரியில்லை

    நான் யாருக்கும் எதிரியில்லை

    மதுசூதனன் மீது நான் குற்றச்சாட்டு வைக்கவேயில்லை. அவரை நான் நேரில் பார்த்ததேயில்லை. போனில் பேசியதை வெளியிட்டேன். எதிரியாக நான் யாரையும் பார்க்கவில்லை.

    எனக்கு பின்னால் நான்தான்

    எனக்கு பின்னால் நான்தான்

    எனக்கு பின்னால் யாருமே இல்லை. முன்னாள் இருக்கும் மக்களுக்காகவே நான் தேர்தலில் போட்டியிட்டேன். டிடிவி தினகரன் எனக்கு பின்னால் இருந்தால் அதை வெளியே கூறி விடுவேன். கமல்ஹாசன், திமுக என யாருமே என் பின்னால் இல்லை. நானே சுயமாக போட்டியிட முடிவு செய்தேன்.

    மக்களுக்கு உதவி செய்வேன்

    மக்களுக்கு உதவி செய்வேன்

    திடீர் என்று தேர்தல் அறிவித்தார்கள். நான் போட்டியிட முடிவு செய்தேன். உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் போனதால் பல விசயங்கள் நடக்கவில்லை. சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யவே தேர்தலில் போட்டி. அரசு பள்ளிகளில் எந்தவித வசதியும் இல்லை. இனிமேல் நடக்கக்கூடாது என்றுதான் போட்டியிடுகிறேன்.

    உள்ளுணர்வு சொன்னதை கேட்பேன்

    உள்ளுணர்வு சொன்னதை கேட்பேன்

    என் குரலை நான் சத்தமாக பதிவு செய்வேன். மக்களுக்கு நல்லது செய்வேன். ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர்தான் பலபேருக்கு தைரியம் வந்துள்ளது என்றால் அது தப்பேயில்லை. நான் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ரசிகன் என்றும் விஷால் கூறினார். என் உள்ளுணர்வு கூறியதை ஏற்று நடக்கிறேன்.

    தெலுங்கு மக்களின் வாக்கு

    தெலுங்கு மக்களின் வாக்கு

    ஆர்.கே. நகரில் இந்திய குடிமகனாக தேர்தலில் நிற்க மனு தாக்கல் செய்தேன். தெலுங்கு பேசும் மக்களின் வாக்குகளை குறிவைத்து நிற்கவில்லை. எல்லா மக்களுக்கும் நல்லது செய்யவே தேர்தலில் நின்றேன். மொழி ரீதியாக என்னை பிரித்து பார்ப்பவர்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை.

    அரசியல் கட்சி

    அரசியல் கட்சி

    நான் கட்சி தொடங்குவேனா என்பது நேற்று நடந்த சம்பவங்களைப் பார்த்து முடிவெடுத்து விட்டேன். கட்சி ஆரம்பித்து விட்டு அரசியலுக்கு வருவதை விட நேரடியாக களத்தில் இறங்கினேன். யாரை பார்த்தும் நான் பயப்படவில்லை. நான் தைரியமாக களமிறங்குவேன். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்றும் விஷால் கூறினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+