திமுக ஆட்சிக்கு வந்தால் கருணாநிதி தான் முதல்வர்- மகளிர் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
சென்னை : தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், கருணாநிதி தான் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார் என்று மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் அருகே படப்பையில் உள்ள கரசங்காலில் தி.மு.க. மகளிர் மாநாடு நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, கனிமொழி, துரைமுருகன் ஆகியோர் பங்கேற்றனர்.
மாநாட்டில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது..
பெண்களுக்கு சொத்தில் சம உரிமை பெற்றுத் தந்தது தி.மு.க., தான். தமிழனுக்கு உரிமை பெற்றுத் தந்தது திராவிட இயக்கம். கருணாநிதி ஆட்சியில் சாராயக்கடைகள் ஒழிக்கப்பட்டன. எம்.ஜி.ஆர்., ஆட்சியில்தான் சாராயக்கடைகள் கள்ளுக்கடைகள் திறக்கப்பட்டன.
மதுபானம் தயாரிக்க தனியார் நிறுவனங்களுக்கு அ.தி.மு.க., ஆட்சியில்தான் அனுமதி வழங்கப்பட்டது. டாஸ்மாக் உருவாக்கப்பட்டது அ.தி.மு.க., ஆட்சியில்தான். டாஸ்மாக் மதுபானங்கள் விற்க துவங்கியது ஜெயலலிதா ஆட்சியில் தான்.
வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தான் ஆட்சிக்கு வரும். மீண்டும் கருணாநிதி முதல்வர் ஆவார். அறிவித்தபடி மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.