திமுக ஆட்சிக்கு வந்தால் 2ஜியை விட பெரிய ஊழல் செய்வார்கள்: ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: திமுக ஆட்சிக்கு வந்தால் 2ஜி ஊழலை விட பெரிய ஊழல் செய்வார்கள் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடந்த பாமக தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.

If DMK comes to power, you can expect bigger scam than 2G: Ramadoss

அப்போது அவர் கூறுகையில்,

அதிமுகவும், திமுகவும் தொடர்ந்து ஊழல் செய்த கட்சிகள் ஆகும். பஞ்ச பூதங்களிலும் ஊழல் செய்தவர் கருணாநிதி. விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்தவர் கருணாநிதி என்று சர்க்காரியா கமிஷன் தெரிவித்தது.

2ஜி ஊழல் பற்றி நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் அவர் ஆட்சிக்கு வந்தால் 2ஜியை விட பெரிய ஊழல் செய்வார்கள்.
சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயலலிதா தற்போது ஜாமீனில் தான் வெளியே உள்ளார்.

வழக்கு விசாரணை முடிந்து அவர் சிறைக்கு செல்வது உறுதி. அதிமுகவும், திமுகவும் இதுவரை ரூ.60 லட்சம் கோடிக்கு ஊழல் செய்துள்ளன. அவர்கள் ஊழல் செய்த பணத்தை வைத்து 10 தொழிற்சாலைகள் துவங்கி 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியும்.

உளுந்தூர்பேட்டையில் பாமக வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும் அனைவரும் டெபாசிட் இழப்பது உறுதி என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+