கருணாநிதி குடும்பத்தார் கேட்டால் அரசு சார்பில் மருத்துவ உதவி செய்யப்படும்: எடப்பாடி பழனிச்சாமி
Recommended Video

சேலம்: கருணாநிதி உடல்நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சேலத்தில் பேட்டியளித்தார். கருணாநிதி உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது. வீட்டில் சிகிச்சை பெற்ற கருணாநிதி, மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
5 முறை முதல்வர், சட்டசபை உறுப்பினராக உள்ளவர் கருணாநிதி. எனவே கருணாநிதி குடும்பத்தார் உதவி கேட்டால், அரசு சார்பில் மருத்துவ உதவிகள் செய்யப்படும். இதுவரை எந்த உதவியும் அவர்கள் கேட்கவில்லை.

மேலும், நீட் என்பது, ஒரு மாநில பிரச்சினை இல்லை இந்தியா முழுவதற்குமான பிரச்சினை. நீட்டை தவிர்க்க எவ்வளவோ முயற்சி செய்தோம். ஆனால் உச்சநீதிமன்றம், உத்தரவிட்டுள்ளதால் நமது நோக்கத்தை நிறைவேற்றுவதில், சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
சேலம் வளர்ந்துவரும் மாநகரம். எனவே, போக்குவரத்து நெரிசலை போக்க, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே, தேவையான நிதி ஒதுக்கீடு செய்தார். அதனடிப்படையில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. முள்வாடிகேட், மணல்மேடு பகுதிகளில் ரயில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications