மக்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்பப்பெறுவேன் - ஓபிஎஸ்
தன்னை கட்டாயப்படுத்திதான் சசிகலா ராஜினாமா கடிதத்தைப் பெற்றார் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: தன்னை கட்டாயப்படுத்திதான் சசிகலா ராஜினாமா கடிதத்தை வாங்கினார் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மக்கள் விரும்பினால் ராஜினாமா கடிதத்தை திரும்பப்பெறுவேன் என்றும அவர் கூறியுள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திடீரென தியானம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மன்னார்குடி கும்பல் செய்த அட்டூழியங்களையெல்லாம் போட்டுடைத்தார்.
சசிகலா தன்னை கட்டாயப்படுத்திதான் ராஜினாமா கடித்தத்தை பெற்றார் என அவர் கூறினார். மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் விரும்பினால் ராஜினாமா கடிதத்தை திரும்பப்பெறுவேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இதனால் சசிகலா முதல்வராக பதவியேற்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த பகீரங்க குற்றச்சாட்டால் சசிகலா தரப்பு பீதியில் உறைந்துள்ளது.