மொத்தமாக போயிடும்.. உங்க கிட்ட ரேஷன் கார்ட் இருக்கா? முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்
சென்னை: ரேஷன் அட்டை வைத்து இருப்பவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.
பிற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் ரேஷன் பொது விநியோக திட்டம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் செய்யப்படும் பல்வேறு மாற்றங்கள் தேசிய அளவில் பல மாநிலங்களில் கவனம் பெற தொடங்கி உள்ளன. பிற மாநில அரசுகளும் தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் கொண்டு வரப்படும் திட்டங்களை பின்பற்ற தொடங்கி உள்ளனர்.
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அரிசு, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அட்டை ரீதியாக வழங்கப்பட்டது. அட்டையை பொறுத்து பொருட்கள் வழங்கப்படும் வீதமும், அளவும் மாறி வருகின்றது.

ரேஷன் பொருட்களில் சுகாதாரம், எடை ஆகியவற்றை உறுதிப்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. உணவு பொருட்கள் சுத்தமாக கிடைக்க வேண்டும். எடையில் ஏமாற்றம் செய்ய கூடாது என்பதால் பொருட்களை நியாயவிலை கடைகளில் பாக்கெட்டுகள் மூலமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
ரேஷன் புதுமை:
ரேஷன் கடைகளில் பல விஷயங்கள் புதுமையாகிவிட்டன. சமீபத்தில் ரேஷன் கடைகளிலும் இதே போல ஆன்லைன் கட்டணம் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது பணமாக செலுத்தாமல் யுபிஐ மூலம் செலுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் சுமார் 2.2 கோடி குடும்ப அட்டைகள் இருக்கிறது. இதன் மூலம் சுமார் 7 கோடி பேர் பயனடைகிறார்கள். எல்லோருக்கும் இந்த புதிய வசதி கொண்டு வரப்படும். அரசின் குறிப்பிட்ட துறைகளில் உள்ள கஜானாவிற்கு நேரடியாக பணம் செல்ல இந்த புதிய முறை அமலுக்கு வருகிறது. ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் மானிய விலையில் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த மூன்று மாதங்களில் இந்த மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
அதிரடி அறிவிப்பு:
இன்னொரு பக்கம் ரேஷன் கார்டில் உள்ளவர்களின் பெயர்களுக்கு ஆதார் கார்டு விவரங்களை கொடுக்க வேண்டும் என்ற விதியும் உள்ளது. ஆதார் கார்ட் இப்போது இந்தியாவில் அடிப்படை அடையாள அட்டையாக மாறிவிட்டது. இந்தியாவில் மிக முக்கியமான அடையாள அட்டையாக இந்த ஆதார் அட்டை திகழ்ந்து வருகிறது. பல துறைகளில் சேவைகளை பெற ஆதார் கார்ட் அவசியம் ஆகிவிட்டது. பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியதும் அவசியம் ஆகிவிட்டது.
இந்த நிலையில் 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு ஆதார் இருக்காது. அதனால் அவர்கள் பெயர்களை ரேஷனில் சேர்க்க ஆதார் அட்டைக்கு பதிலாக பிறப்பு சான்றிதழ் கொடுக்கப்படும். ஆதார் 5 வயதுக்கு பின் கொடுக்கப்பட்டதும் அதன் விவரங்களை கொடுத்து ரேஷன் அட்டையை புதுப்பிக்க வேண்டும்.

இந்த நிலையில் அப்படி செய்யாத பட்சத்தில் இனிமேல் 5 வயது கடந்ததும் ஆதார் விவரம் கொடுக்கப்படாத குழந்தைகள் பெயர் தானாக நீக்கப்படும். இதனால் குடும்ப அட்டையில் ஒருவர் பெயர் நீக்கப்பட்டு அவருக்கான சலுகைகள் போகும். மீண்டும் பெயரை சேர்க்க ஆதார் விவரங்களை கொடுக்க வேண்டும்.
எனவே உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்து.. ஆதார் இல்லாமல் ரேஷன் அட்டையில் பெயர் சேர்க்கப்பட்டு இருந்தால் 5 வயது ஆனவுடன் ஆதார் அட்டை எடுத்து, ரேஷனிலும் அதை அப்டேட் செய்து விடுங்கள். இல்லையென்றால் இனிமேல் 5 வயது கடந்ததும் ஆதார் விவரம் கொடுக்கப்படாத குழந்தைகள் பெயர் தானாக நீக்கப்படும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications