ஊடக தர்மத்தை குழிதோண்டி புதைக்கும் பத்திரிகைகள்: இளவரசி மகள் கிருஷ்ணபிரியா திடீர் ’பொங்கல்’
ஊடக தர்மத்தை பத்திரிகைகள் குழிதோண்டி புதைப்பதாக இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா திடீரென பொங்கியுள்ளார்.
சென்னை: ஊடக தர்மத்தை பத்திரிகைகள் குழிதோண்டி புதைப்பதாக சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் இளவரசியின் மகளும் வருமான வரி சோதனையில் சிக்கியவருமான கிருஷ்ணப்பிரியா திடீரென சாடியிருக்கிறார்.
சசிகலா சிறைக்குப் போன நிலையிலும் அதிமுக இரண்டாக பிளவுபட்ட நிலையில் அரசியலில் நுழைய ஆழம் பார்த்தவர் கிருஷ்ணப்பிரியா. நீட் தேர்வுக்கு தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பலை, அனிதாவின் மரணம் ஆகியவற்றின் மூலமாக அரசியலுக்குள் நுழைய காலடி எடுத்து வைத்தார் கிருஷ்ணப்பிரியா.

சசியைப் போலவே..
சசிகலாவைப் போலவே நடை, உடை, பேச்சு என அனைத்தையும் ஜெயலலிதாவைப் போல மாற்ரிக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார் கிருஷ்ணப்பிரியா. வருமான வரி சோதனையில் சிக்கிய போதும் கூட மனம் தளராத கிருஷ்ணப்பிரியா அதையும் ஒரு சாதகமான அம்சமாக பார்த்தார்.

தினகரன் கொந்தளிப்பு
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தயக்கமே இல்லாமல் பதிலளித்தார். இந்த நிலையில் ஊடகங்களில் சசிகலாவின் அக்காள் மகன் தினகரன் திடீரென சொத்து விவகாரங்களில் கொந்தளித்திருந்தார்.

பேஸ்புக்கில் கிருஷ்ணபிரியா
இதனைத் தொடர்ந்து தற்போது கிருஷ்ணப்பிரியாவும் கொந்தளிக்க தொடங்கியுள்ளார். இது தொடர்பாக தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கிருஷ்ணப்பிரியா பதிவிட்டுள்ளதாவது:

கேள்வி கேட்பேன்
கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் பத்திரிக்கை மற்றும் ஊடக தர்மத்தை குழி தோண்டி புதைத்துக் கொண்டிருக்கும் சில பத்திரிக்கையாளர்களிடம் நான் அவசியம் , சில கேள்விக்கணைகளைத் தொடுக்க வேண்டும்.. தொடுப்பேன்
இவ்வாறு கிருஷ்ணப்பிரியா பதிவிட்டுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications