கடலூரில் சீமானுக்கு பெரும் பின்னடைவு.. 5வது இடத்தில் தத்தளிப்பு
கடலூர்: நாம் தமிழர் சார்பில் கடலூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பின்னடைவை சந்தித்துள்ளார். அவர் கடைசியாக கிடைத்த தகவல்படி, 5வது இடத்தில் தத்தளித்துக்கொண்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. சீமான், கடலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், 9.30 மணி நிலவரப்படி, சீமான் 4190 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்தார்.

இத்தொகுதியில், அதிமுக சார்பில் பலம் வாய்ந்த அமைச்சர் எம்.சி.சம்பத் போட்டியிடுகிறார். திமுக சார்பில், புகழேந்தி களம் கண்டுள்ளார்.
கடைசியாக கிடைத்த தகவல்படி 8535 வாக்குகள் வித்தியாசத்தில், சம்பத் முதலிடத்தில் உள்ளார். புகழேந்தி 2வது இடத்தில் உள்ளார்.
ஆனால், சீமானுக்கு 2,288 வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தது. சீமான் 5வது இடத்தில் உள்ளார். எனவே வெற்றி வாய்ப்பு அவருக்கு கை நழுவி போய்விட்டது. படுதோல்வியை தவிர்க்க போராடி வருகிறார் சீமான்.












Click it and Unblock the Notifications