தருமபுரியில் வங்கியில் பணமெடுக்க காத்திருந்த விஏஒ சுருண்டு விழுந்து பலி...
தருமபுரி அருகே வங்கியில் பணம் எடுப்பதற்கு காத்திருந்த ஓய்வுபெற்ற விஏஒ சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி : தருமபுரி மாவட்டம் பென்னாகரம் இந்தியன் வங்கியில் பணம் எடுப்பதற்காக ஓய்வுபெற்ற விஏஒ ஒருவர் காத்திருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்த அவர் அங்கேயே உயிரிழந்தார்.
பென்னாகரம் பகுதியைச் சேர்ந்தவர் ராம்மோகன் ராவ். ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரான இவர், இன்று அப்பகுதியில் உள்ள இந்தியன் வங்கிக்கு பணம் எடுக்க சென்றார்.

நீண்டநேரமாக வங்கியில் காத்திருந்த அவர், திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
வங்கி வாசலில் பணமெடுக்க காத்திருந்த முன்னாள் அரசு ஊழியர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நவம்பர் 8ம் தேதியன்று 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததில் இருந்து நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பணம் எடுப்பதற்காக வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். வரிசையில் காத்திருந்தவர்களின் இதுவரை 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications