கன்னியாகுமரியில் மின்னல் தாக்கியதில் இளம் பெண் பலி!

கன்னியாகுமரியில் தொடர்ந்து பெய்த மழையின் போது, மின்னல் தாக்கி ரம்யா என்ற இளம்பெண் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் மெதப்பங்கோடு மலைப் பகுதியில் மின்னல் தாக்கியதில் இளம் பெண் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளான குலசேகரம் , திற்பரப்பு, அருமனை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கன மழை பெய்தது. அப்போது அருமனை அருகே மெதப்பங்கோடு பகுதியை சேர்ந்த வினு என்பவரது மனைவி ரம்யா, வீட்டிலிருந்து வெளியே வந்த போது திடீரென மின்னல் தாக்கி சம்பவ இடத்தில் விழுந்தார்.

In Kanyakumari young woman died in lightening

இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் ரம்யாவை தூக்கியபோது இறந்த நிலையில் காணப்பட்டார். இதுதொடர்பாக அருமனை போலீசாருக்கு தகவல் கொடுத்தன் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மரணமடைந்த ரம்யாவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து கலப்புதிருமணம் செய்தார். அவருக்கு அஜய் என்ற ஆண் குழந்தை உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+