கனமழை காரணமாக சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்
சென்னை: சென்னையில் தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலோர மாவட்டங்களிலும் தமிழகம் மற்றும் புதுவையில் அனேக இடங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை பெய்யும் என்றும், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் இன்று மாலை 6 மணி முதல் பல்வேறு இடங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. நந்தனம், தி.நகர், எழும்பூர், புரசைவாக்கம், கிண்டி, வடபழனி, போரூர், விருகம்பாக்கம், கோயம்பேடு, ஈக்காட்டுத்தாங்கல், நந்தனம், சைதாப்பேட்டை,போரூர், பூந்தமல்லி, சூளைமேடு,நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
கனமழையின் காரணமாக பூந்தமல்லி, புரசைவாக்கம், மில்லர் சாலை, ரித்தர்டன் சாலை உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தற்போது வரை மழை விடாமல் பெய்து வருகிறது.












Click it and Unblock the Notifications