வருமான வரி வழக்கில் இருந்து சசிகலா உள்ளிட்டோரை விடுதலை செய்தது செல்லும் - உயர்நீதிமன்றம்
சென்னை: வருமான வரித்துறையினர் தொடர்ந்த வழக்கு ஒன்றில் சசிகலா, இளவரசி, தினகரன் ஆகியோரை எழும்பூர் நீதிமன்றம் விடுதலை செய்தது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள அமிர்தாஞ்சன் மாளிகையை வாங்குவதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக வருமான வரித்துறை சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் முதல்வர் ஜெயலிலதாவின் தோழியான சசிகலா, அவரது சகோதரி இளவரசி மற்றும் தினகரன் ஆகியோர் மீது வருமான வரித்துறை குற்றம் சாட்டியிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என்பதற்கு போதிய ஆதாரம் சமர்பிக்கப்படவில்லை எனக் கூறி கடந்த மே மாதம் விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், இதை எதிர்த்து வருமான வரித்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சசிகலா உள்ளிட்ட மூன்று பேரையும் எழும்பூர் நீதிமன்றம் விடுதலை செய்தது செல்லும் என்று உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications