சி.ஆர்.சரஸ்வதியை நோக்கி பறந்து வந்த கற்கள் - வீடியோ
சி.ஆர்.சரஸ்வதி கலந்துகொண்டு பேசிய கூட்டத்தில் கற்கள் வீசப்பட்டதால் பரபரப்பு உண்டானது.
விழுப்புரம்: அண்ணாவின் 109ஆவது பிறந்தநாள் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. அக்கூட்டத்தில் சி.ஆர் சரஸ்வதி பேசியபோது கற்கள் வீசப்பட்டதால் பரபரப்பு உண்டானது.
தற்போது தினகரன் அணியில் இருக்கும் சி.ஆர் சரஸ்வதி, விழுப்புரத்தில் நடந்த அண்ணாவின் 109ஆவது பிறந்தநாள் விழா கூட்டத்துக்கு சென்றிருந்தார். அக்கூட்டத்தில் அவர் பேசிக்கொண்டிருதபோது திடீரென கற்கள் மேடையில் வந்து விழுந்தன.
அதைப் பார்த்து மேடையில் இருந்த அனைவரும் திடுக்கிட்டனர். உடனே கூட்டத்தில் கல் எறிந்த நபரைக் கண்டுபிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து சி.ஆர்.சரஸ்வதி கூறும்போது, நாங்களும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் தானே. எதர்கு இப்படி தரம் தாழ்ந்து நடந்துகொள்ள வேண்டும்?
சபாநாயகர் மற்றும் கொறடாவின் உத்தரவுகள் செல்லாது. எம்.எல்.ஏகளை நீக்கிய விவகாரத்தில் நீதிமன்றத்தில் நாங்கள் வெல்வோம் என கூறினார்.