கலக்கலாய் தொடங்கும் கரிசல் திரைவிழா…..
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சார்பிலான கரிசல் திரைவிழா இன்று துவங்கிறது.இவ்விழாவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் 30 கல்லூரிகளை சேர்ந்த சுமார் 300 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இது தொடர்பாக தொடர்பியல் துறைத்தலைவர் கோவி்ந்தராஜூ கூறுகையில், "நெல்லை மனோன்மணியம் சுந்தனார் பல்கலை கழக தொடர்பியல் துறையின் "மனோ மீடியா கிளப்" கரிசல் திரை விழாவை ஆண்டுதோறும் நடந்தி வருகிறது. இந்த ஆண்டு இவ்விழா இன்று தொடங்கி 5ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது.
விழாவில் ஊடகம் சம்பந்தமான ரேடியோ ஜாக்கி, குறும்படம், டாக்குமென்டரி பிலிம், மீடியா வினாடி வினா,நாட்டுப்புற நடனங்கள், மேற்கத்திய நடனங்கள், குற்ற கதைகள் உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் பங்கேற்று முதலிடம் பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கேடயம் வழங்கப்படும்.
இவ்விழாவை பல்கலைக்கழக துணைவேந்தர் குமரகுரு துவங்கி வைக்கிறார். இன்று இதில் புகைப்படத் துறையை சேர்ந்த அமிர்தராஜ் ஸ்டீபன் மற்றும் பத்திரிக்கையாளர் கவின்மலர் கலந்து கொண்டு புகைப்படவியல்,இதழியல் சம்பந்தமான மாணவர்களின் கேள்விகளுக்கு விளக்கமளிக்கிறார்கள்.
5ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் டைம்ஸ் ஆப் இந்தியா முதன்மை நிருபர் கார்த்திகை செல்வன் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார் " என்று தெரிவித்தார்.