ரூ. 2,500 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக புகார்.. காக்னிஸன்ட் நிறுவனத்துக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
வரி ஏய்ப்பு செய்ததாக காக்னிஸன்ட் மென்பொருள் நிறுவனத்துக்கு வருமான வரித்துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: வரி ஏய்ப்பு செய்ததாக காக்னிஸன்ட் மென்பொருள் நிறுவனத்துக்கு வருமான வரித்துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
காக்னிஸன்ட் நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்துள்ளது.

வருமானத்தை குறைவாக காட்டி 2500 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக காக்னிஸன்ட் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. காக்னிஸன்ட் நிறுவனத்தின் சென்னையில் உள்ள கிளைக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காக்னிஸன்ட் நிறுவனத்துக்கு சென்னையில் ஓஎம்ஆர் உட்பட பல்வேறு இடங்களில் ஏராளமான கிளைகள் உள்ளது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications