காரைக்குடி பள்ளியில் சுதந்திர தின விழா.. மாணவர்களுக்கு பேச்சு, ஓவியம், மாறு வேடப் போட்டி
காரைக்குடி: காரைக்குடியில் உள்ள இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர் நிலைப் பள்ளியில் சுதந்திர தினத்தையொட்டி நேற்று தேசியக் கொடி ஏற்றும் வைபவம் நடந்தது. மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டன.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நேற்று சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு காரைக்குடி நகர்மன்றதலைவர் கற்பகம் இளங்கோ அவர்கள் தலைமை ஏற்று தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின சிறப்புரையாற்றினார். தலைமையாசிரியர் பீட்டர்ராஜா வரவேற்புரை ஆற்றினார்.

இவ்விழாவில் பள்ளி மேலாண்மைகுழுத் தலைவர் அழகு சுந்தரி, பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக்குழுத் தலைவர் நாகநாதன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் விடுதலைப் போராட்டவீரர்கள் பற்றி பேசினார்கள். சுதந்திர தினவிழாவையொட்டி பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, மாறுவேடப் போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நகர்மன்றத் தலைவர் பரிசுகள் வழங்கினார். பட்டதாரி ஆசிரியர் விஜயலெட்சுமி அவர்கள் நன்றி கூறினார். பட்டதாரி ஆசிரியர் கோமதி அவர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.












Click it and Unblock the Notifications