தினகரன் பணம் கொடுக்கிறார்...நாங்கள் பாசத்தைக் கொடுக்கிறோம் - 'ஆவேச' மதுசூதனன்
ஆர்கே நகரில் பிரச்சாரம் செய்து வரும் மதுசூதனன், தினகரன் வாக்களர்களுக்கு பணம் கொடுத்து வருகிறார். நாங்கள் பாசத்தை கொடுத்து வருகிறோம் என ஆவேசமாகக் கூறினார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆர்கே நகர் பிரச்சாரத்தில் பேசிய ஒபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனன், தினகரன் அணியினர் பணத்தை தருகின்றனர். நாங்கள் பாசத்தை தருகிறோம் எனக் கூறி ஓட்டுகள் சேகரித்து வருகிறார்.
ஆர்கே நகரில் இடைதேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், அங்கு போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி வேட்பாளர் மதுசூதனன். அவர் ஆர்கே நகரிலுள்ள தண்டையார்பேட்டையில் பிரச்சாரம் செய்துவரும் நிலையில், தினகரன் அனியினர் மக்களிடம் பணம் கொடுத்து வோட்டு கேட்கின்றனர். ஒரு வோட்டுக்கு நான்காயிரம் ரூபாய் கொடுக்கின்றனர்.
அந்த பணம் ஜெயலலிதாவிடமிருந்து கொள்ளை அடித்தது. ஆனால், மக்களிடம் நாங்கள் பணம் கொடுக்கவில்லை. பாசத்தைத்தான் கொடுக்கிறோம்'' என ஆவேசமாகப் பேசினார்.












Click it and Unblock the Notifications