செல்லாத ரூபாய் நோட்டுகள்: 'வெறிச்' மாமல்லபுரம்... வெளியேறும் வெளிநாட்டு பயணிகள்!
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறவிக்கப்பட்டதால் மாமல்லபுரத்தில் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது.
மாமல்லபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின எண்ணிக்கை குறைந்துள்ளதால் அதனை நம்பி பிழைப்பு நடத்தி வரும் வியாபாரிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்கள் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட புராதன சின்னங்களாக உள்ளன. இவற்றைக் காண நாள்தோறும் உள் நாட்டு பயணிகள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பயணிகளும் வந்து செல்வர்.ஆனால் கடந்த 8ஆம் தேதி பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால் மக்களிடம் கடும் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது.

மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளில் காத்துக் கிடக்கின்றனர்.பணம் எடுக்க ஏடிஎம்களிலும் நீண்ட வரிசையில் நிற்கின்றனர். இதனால் அன்றாட செலவுக்கே மக்கள் அல்லாடி வருகின்றனர்.
இந்தியா வந்துள்ள வெளிநாட்டு பயணிகளும் தங்களிடம் உள்ள பணம் செல்லாது என்பதால் செய்வதறியாது திகைத்துள்ளனர்.தங்கும் விடுதிகளில் 500,1000 ரூபாய் நோட்டுகள் ஏற்கப்படவில்லை என்றும் தங்கள் நாட்டு கரன்சியும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, அவற்றை மாற்றவும் வங்கி நிர்வாகம் ஒத்துக்கொள்வதில்லை என்றும் வெளிநாட்டுப் பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பணப்புழக்கம் குறைந்ததால் மாமல்லபுரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது. வெளிநாட்டு பயணிகளும் வெளியேறி வருகின்றனர். இதனால் மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்தி வரும் வியாபாரிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
புராதன சிற்பங்களை காண வசூலிக்கும் கட்டணத்துக்கு 500 1000 ரூபாய் நோட்டுகள் ஏற்கப்படாது என தொல்லியல்துறை நோட்டீஸ் ஒட்டியுள்ளது. இதனால் சில்லரை இன்றி தவிக்கும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
சுங்கச்சாவடிகளில் கட்டணம் ரத்து செய்யப்பட்டதைப் போல் மாமல்லபுரத்திலும் கட்டணம் ரத்து செய்யப்பட வேண்டும் என அப்பகுதியினர் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications