மங்கள்யானில் வெற்றிகரமான முதற்கட்ட திருத்தம்: பேஸ்புக்கில் இஸ்ரோ தகவல்
சென்னை: செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலத்தின் சுற்றுப்பயணத்தில் முதல்கட்ட சுற்றுப்பாதையில் திருத்தங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது இஸ்ரோ.
கடந்த மாதம் இந்தியாவின் சார்பில் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக மங்கள்யான் என்ற விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவியது. இதன் மூலம், செவ்வாய் கிரகத்தை ஆராய விண்கலம் அனுப்பிய முதல் ஆசிய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
தொடர்ந்து மங்கள்யானின் செயல்பாடுகளைக் கவனித்து வரும் இஸ்ரோ, இன்று அதன் முதல் சுற்றுப்பாதை திருத்தத்தை வெற்றிக்கரமாக செய்து முடித்துள்ளதாக பேஸ்புக்கில் தகவல் வெளியிட்டுள்ளது.

முதல்கட்ட திருத்தம்....
தற்போது மங்கள்யான் விண்கலம் சுமார் 2.9 பில்லியன் கிலோமீட்டருக்கு அப்பால் சென்றுகொண்டிருக்கும் நிலையில் இன்று காலை சரியாக 6.30 மணியளவில் 22 நியூட்டன் த்ரஸ்ட்டர் கொண்ட தாக்குதலை நடத்தி விணகலத்தின் சுற்றுப்பயணத்தின் திருத்தங்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளது இஸ்ரோ.

சரியான இலக்கு....
இந்நடவடிக்கையின் காரணமாக விண்கலம் செவ்வாய் கிரகத்தின் இலக்கை நோக்கிய தனது பயணத்தில் மிகச்சரியாக செல்லும்படி வெற்றிகரமான மாற்றங்கள் செய்யபட்டுள்ளன.

பேஸ்புக் பக்கத்தில்....
இது குறித்து தனது பேஸ்புக் பகக்த்தில் இஸ்ரோ தெரிவித்திருப்பதாவது, ‘டிசம்பர் 1-ந் தேதி முதல் தங்கள் வல்லுநர்கள் விண்கலத்தின் செயல்பாடுகளையும், வேகத்தையும், அதன் பாதையையும் அவதானித்து வந்தனர். அதில் எப்படிப்பட்ட திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என முடிவெடுத்து அதை இன்று வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளனர்' எனக் கூறப் பட்டுள்ளது.

வெகு தொலைவில்....
மேலும், 20.9 லட்சம் கிலோமீட்டருக்கு அப்பால் விண்கலம் சென்றுகொண்டிருக்கும் நிலையில் அதிலுள்ள கணிணிக்கும், இஸ்ரோவுக்கும் விண்கலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பான தகவல்கள் 20 நொடிகளில் பரிமாறிக்கொள்ளப்பட்டதாகவும் பெருமையுடன் இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.

மொத்தம் 4 கட்ட திருத்தங்கள்....
மொத்தம் நான்கு கட்ட பாதை மாற்ற திருத்தங்கள் செய்யத் திட்டமிடப் பட்டுள்ள நிலையில், இன்று முதற்கட்ட திருத்தங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications