விஷால் வெள்ளிக்கிழமையன்று ஆஜராக வருமானவரித்துறை சம்மன்
விஷால் வெள்ளிக்கிழமையன்று ஆஜராக வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.
சென்னை: நடிகர் சங்க செயலாளரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் வரும் வெள்ளிக்கிழமையன்று நேரில் ஆஜராக வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் இன்று ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவினர் சோதனை நடத்தியதாக முதலில் செய்திகள் வெளியாகின. ஆனால் இதனை ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் மறுத்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், வருமான வரித்துறை சோதனை நடத்தியது உண்மைதான். என்னிடம் கணக்குகள் சரியாக இருக்கிறது என கூறியிருந்தார்.
இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமையன்று உரிய ஆவணங்களுடன் விஷால் நேரில் ஆஜராக வேண்டும் என வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதில், விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தின் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டன.

விஷாலின் தயாரிப்பு நிறுவனம் ரூ51 லட்சம் வரி செலுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications