கோவை, வேலூர், கடலூர்.. மாநிலம் முழுக்க பரவுகிறது இளைஞர் போராட்டம்.. போலீசார் திகைப்பு!
கல்லூரிகளுக்கு விடுமுறை என்றபோதிலும், கல்லூரி மாணவர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஒன்றிணைந்து தங்கள் விடுமுறை கொண்டாட்டங்களை புறந்தள்ளிவிட்டு, வீதிக்கு வீதி களம் கண்டுள்ளனர்.
இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்றபோதிலும், கல்லூரி மாணவர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஒன்றிணைந்து தங்கள் விடுமுறை கொண்டாட்டங்களை புறந்தள்ளிவிட்டு, தமிழர் பண்பாடு காக்க வீதிக்கு வீதி களம் கண்டுள்ளனர்.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், அலங்காநல்லூரில் போலீசார் நடத்தும் அத்துமீறல்களுக்கு எதிராகவும், இளைஞர் போராட்டம் மாநிலம் முழுக்க பரவத் தொடங்கியுள்ளது.

கோவை கொடிசியா மைதானத்தில் இளைஞர்கள் குவிந்து ஜல்லிக்கட்டு ஆதரவு கோஷங்களை எழுப்பி வருகிறார்கள்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரிலுள்ள பஸ் நிலையம் அருகே, இளைஞர்கள் தர்ணா நடத்தி வருகிறார்கள்.
மதுரை ஒத்தக்கடையில் இளைஞர்கள், மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கடலூரிலும் இளைஞர் போராட்டம் வெடித்துள்ளது. இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டம் மாநிலத்தின் சிறு நகரங்களுக்கும் பரவுகிறது. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்றபோதிலும், கல்லூரி மாணவர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஒன்றிணைந்து தங்கள் விடுமுறை கொண்டாட்டங்களை புறந்தள்ளிவிட்டு, தமிழர் பண்பாடு காக்க வீதிக்கு வீதி களம் கண்டுள்ளனர்.
ஆங்காங்கு வெடித்து கிளம்பும் இளைஞர் படையை எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல் போலீசார் திகைப்படைந்துள்ளனர். எந்த அரசியல் தலைமையும் இன்றி, தன்னெழுச்சியாக இளைஞர்கள் கூடிவருவதை ஒரு வரலாற்று புரட்சி என வர்ணித்துள்ளார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
Youths of Tamilnadu enter into the streets for Jallikattu protest.
: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், அலங்காநல்லூரில் போலீசார் நடத்தும் அத்துமீறல்களுக்கு எதிராகவும், இளைஞர் போராட்டம் மாநிலம் முழுக்க பரவத் தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications