இலங்கையிலி்ருந்து 110 மீனவர்களையும் மீட்க நிச்சய நடவடிக்கை.. ஜெ. உறுதி
சென்னை: இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்டு இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள 110 தமிழக மீனவர்களையும் மீட்கத் தேவையான அனைத்து நடவடிக்கைளையும் தனது அரசு எடுத்து வருவதாக முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார். எனவே எங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசிப்போம் என்று மீனவப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
சிங்களக் கடற்படையினர், தொடர்ந்து தமிழக மீனவர்களை சிறை பிடிப்பதும், அடித்து விரட்டுவதும், துப்பாக்கியால் சுடுவதும் தொடர்கதையாகி விட்டது. இந்நிலையில் கடந்த 8-ந் தேதி நாகை அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்த 107 மீனவர்களையும், விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இது மீனவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த அக்கிரமச் செயலைக் கண்டித்து நாகை மாவட்ட மீனவர்கள் வேலைநிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர்.
நேற்று முன்தினம் முதல் நாகை தாலுகா பகுதியை சேர்ந்த நாகூர் மேலத்தெரு, நாகூர் ஆரியநாட்டுத் தெரு, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார் நகர், சாமந்தான்பேட்டை, கல்லார், நாகை ஆரியநாட்டுத் தெரு ஆகிய 8 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் நாகை தலைமை தபால் நிலையம் அருகில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் மீனவ சமுதாயப் பிரதிநிதிகள் குழு சந்தித்துப் பேசியது.
பின்னர் வெளியில் வந்த அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், மீனவ்ர்கள் விவகாரத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார். எனவே அவரது விளக்கத்திற்கு மதிப்பளித்து, உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications