தமிழக நதிநீர் உரிமையைக் காக்க போரடியவர் ஜெயலலிதா - வைகோ
தமிழகத்தின் நதிநீர் உரிமைகளுக்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை போல் எந்த முதல்வரும் போராடியதில்லை என்று வைகோ கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
ஒவ்வொரு முறையும் முல்லைப்பெரியாறு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து நல்ல தீர்ப்பை அவர் பெற்றுத்தந்தார்.
ஆனால் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்துக்கு பச்சை துரோகம் செய்துள்ளார். இந்த விஷயத்தில் மோடியும், எடப்பாடி பழனிசாமியும் கூட்டு குற்றவாளிகள்.

இதற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பதவியை ராஜிநாமா செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 21ஆம்தேதி சென்னையில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
போலீசார் அனுமதி தர மறுத்தாலும் தடையை மீறி தொண்டர்களுடன் சென்று ஆர்ப்பாட்டம் நடத்துவேன் இவ்வாறு கூறினார்












Click it and Unblock the Notifications