பொங்கலையொட்டி இலவச வேட்டி, சேலை திட்டத்தை துவக்கி வைத்த ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா துவங்கி வைத்தார்.

தமிழர் திருநாளான பொங்கலையொட்டி மாநில அரசு ஆண்டுதோறும் இலவச வேட்டி, சேலை வழங்கி வருகிறது. 1983ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்.-ஆல் துவக்கி வைக்கப்பட்ட இலவச வேட்டி, சேலை திட்டம் இன்றும் நடைமுறையில் உள்ளது.

Jaya kick starts free dhoti, saree scheme ahead of Pongal

இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்ட துவக்க விழா தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா திட்டத்தை துவங்கி வைத்தார்.

அவர் 5 ஏழை குடும்பங்களுக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்கினார். 2016ம் ஆண்டு 1 கோடியே 68 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு அரசுக்கு ரூ. 4 கோடியே 36 லட்சம் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் உத்தரவுப்படி இந்த திட்டத்தின் கீழ் கடந்த 2014ம் ஆண்டில் இருந்து பாலிகாட் சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+