'அம்மா' செல்போன் ரகசியம் இது தான்: புட்டுப் புட்டு வைத்த குஷ்பு
கோவை: ரூ.350 மதிப்புள்ள சீன செல்போன்களை அளித்து மக்களை ஏமாற்ற நினைக்கிறார் ஜெயலலிதா என்று நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அதிமுகவின் தேர்தல் அறிக்கை மிகப் பெரிய ஜோக். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று விரும்பியிருந்தால் அவர் முதல்வராக ஆனவுடன் செய்திருக்க வேண்டும். ஆட்சிக் காலத்தில் எல்லாம் ஒன்றும் செய்யாமல் தேர்தல் நேரத்தில் இலவசங்களை அறிவித்து மக்களை கவர நினைக்கிறார்.

திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மக்கள் நலனை மனதில் வைத்து பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானதை பார்த்து ஜெயலலிதாவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.
அனைவருக்கும் இலவச செல்போன் அளிப்பதாக அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 350 மதிப்புள்ள சீன செல்போன்களை அளித்து மக்களை ஏமாற்ற நினைக்கிறார் ஜெயலலிதா என்றார்.












Click it and Unblock the Notifications