தமிழக ஹஜ் பயணிகளுக்கு கூடுதல் இடம் ஒதுக்குங்கள்: மோடிக்கு ஜெ. கடிதம்
சென்னை: இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் செய்ய விரும்பி விண்ணப்பித்துள்ளவர்களுக்கு கூடுதல் இடம் வழங்கக் கோரி முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் எழுதியிருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டில் இருந்து இந்த ஆண்டு (2015) ஹஜ் பயணம் மேற்கொள்ள 15,032 பேர் ஹஜ் கமிட்டியிடம் விண்ணப்பம் செய்தனர். ஆனால் மும்பையில் உள்ள இந்திய ஹஜ் கமிட்டி தமிழ்நாட்டில் இருந்து இந்த ஆண்டு 2,585 பேருக்கு மட்டுமே ஹஜ் யாத்திரைக்கு ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளது.

ஹஜ் 2015 வழிகாட்டு விதிமுறைகளின்படி முன்பதிவு அடிப்படையில் 1699 ஹஜ் பயணிகள் தேர்வானார்கள். பொதுப்பிரிவில் 886 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். மற்றவர்கள் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பித்தவர்களில் 12 ஆயிரம் பேர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
முந்தைய ஆண்டுகளில் மத்திய அரசு கூடுதல் இடங்களை ஒதுக்கீடு செய்தது. இதனால் தமிழ்நாட்டில் இருந்து நிறைய பேர் ஹஜ் பயணம் செல்ல முடிந்தது. 2013-ம் ஆண்டு 3,696 பேரும், 2014-ம் ஆண்டு 2,858 பேரும் ஹஜ் பயணம் மேற்கொண்டனர். இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் பயணம் செல்ல கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகத்தை மத்திய அரசு கேட்டுக் கொள்ள வேண்டும் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
இந்திய கப்பல்களுக்கு அனுமதி? ஈரான் அதிபருக்கு போன் போட்ட மோடி! பிரச்சனை தீருமா! -
"கொரோனா டைம் போல.." ஒரு நொடி யோசித்து பிரதமர் சொன்ன வார்த்தை.. எல்பிஜி சிக்கல் அவ்வளவு மோசமா? -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி!












Click it and Unblock the Notifications